blog pengalthalm
| |

கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?

கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்ய, கோதுமை மாவுடன் வெல்லம்/சர்க்கரை, பழுத்த வாழைப்பழம், ஏலக்காய், தேங்காய் துருவல், அரிசி மாவு (விருப்பப்பட்டால்), பால் சேர்த்து அவரவர்களுக்கு விருப்பமான சமையல் பொருட்களை வைத்து செய்வார்கள். அது சமையல் செய்யும் திறமை + ஆசையை பொறுத்து அமையும். எனினும் இதற்கு அடிப்படை கோதுமை மாவு மற்றும் சக்கரை/வெல்லம் தான். சிலர் அவசரத்திற்கு இரண்டை மட்டும் வைத்து சுட்டு குழந்தைகளுக்கு கொடுத்துவிடுவார்கள். என் வீட்டில் என்னுடைய மகள் 8வது படிக்கும் போது…

blog pengalthalam
| | |

பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டங்கள்

ஒவ்வொரு பெண்ணுமே வெவ்வேறு வகையான உடல் வகை கொண்டவர்கள் அவர்கள். அதனால் அவர்களுக்கு வரும் மாதவிடாய் நிற்கும் விதங்களும், சரி காலகட்டங்களும் சரி வெவ்வேராகவே இருக்கும். ‘ஏன் இப்படி வருது?, ஏன் மாதவிடாய் எனக்கு மாத்தி மாத்தி வருது?, எனக்கு மாதவிடாய் நிற்க போற நேரம் வந்துருச்சா? இதை எப்படி தெரிந்து கொள்வது? யார் கிட்ட கேட்கிறது?’ – என்று நடுத்தர வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனைவருக்குமே ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த மாதிரி எண்ணங்கள்…

blog pengalthalam
| | |

அக்பர் மற்றும் பீர்பாலின் முதல் சந்திப்பு கதை

அக்பர் பீர்பால் கதைகளில், ‘அவர்கள் இருவரின் முதல் சந்திப்பு இப்படியும் இருக்கலாம்’ என்ற கதை பாரம்பரியமாக, வாய்மொழியாக பரவலாக இருக்கிறது. பேரரசர் அக்பர் வேட்டைக்குச் செல்லும்போது, வழிதவறிப் போக, மகேஷ் தாஸ் என்ற புத்திசாலியான இளம் வாலிபர் (பின்னர் பீர்பால் என்று அழைக்கப்படுபவர் இவரே) அரசருக்கு வழி காட்டுவதையும் இக்கதை விவரிக்கிறது. அந்த கதையை இங்கு காண்போம். ஒருமுறை அக்பர் தனது படையுடன் காட்டு விலங்குகளை வேட்டையாட காட்டுக்குள் சென்றார். அரசருடன் அவரது பரிவாரங்கள் மற்றும் படை…

blog pengalthalam
| | |

அக்பர் பீர்பால் கதைகள் / Akbar birbal Stories

அக்பர் & பீர்பால் மிகப் பெரிய பேரரசரான அக்பரையும், அவரின் புத்திசாலி அரசவை அமைச்சரான பீர்பாலையும் உள்ளடக்கிய அற்புதமாக இந்திய நாட்டுப்புறக் கதைகள் தான் இந்த அக்பர் பீர்பால் கதைகள். மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இவரின் கதைகள் கூறுகின்றன. இவரின் கதைகள் நேர்மை, விரைவான சிந்தனை மற்றும் நியாயத்தன்மை பற்றிய ஒழுக்கங்களைக் கற்பிப்பது, அறிவை பயன்படுத்தி சிக்கல்களில் இருந்து எவ்வாறு விடுபடுவது போன்றவற்றை கதை கேட்பவர்களுக்கு எடுத்து கூறும் விதங்களில் அமைந்திருக்கின்றன. காகங்களை எண்ணுவது, மந்திரக் குச்சிகளைக்…

blog pengalthalam
| | |

பசி போக்கும் உருளைக்கிழங்கு ஆம்லெட்

உருளைக்கிழங்கு ஆம்லெட் பொதுவாக சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் இல்லையென்றால் எப்பொழுதும் பொரியல் வைத்திருப்போம். சிலருக்கு சாப்பாட்டிற்கு முட்டை ஆம்லெட் கண்டிப்பாக தேவைப்படும். ஒரே மாதிரியாக ஆம்லெட் போட்டு சாப்பிடாமல், கொஞ்சம் வித்தியாசமாக செய்து சாப்பிட்டு பார்க்கலாமா? இந்த ஆம்லெட்டை உணவுக்கு பக்க உணவாக செய்து சாப்பிடலாம். சாதம் ஒரு குழம்பு மட்டும் இருந்தாலும் கூட இந்த ஆம்லெட் இருந்தால் விருந்து சாப்பிட நிறைவு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் மாலை பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு…

blog pengalthalam
| |

பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி?

பொட்டுக்கடலை சட்னி  நம் இட்லி தோசைக்கு பொதுவாக காலை நேரம் என்றால் சாம்பார், குருமா என்று செய்வோம். இதுவே மாலை இரவு நேரம் என்றால் அவசரத்திற்கு அப்பொழுது என்ன தோன்றுமோ அந்த சட்னியை செய்து வைத்து விடவும் இல்லையா? அந்த நேரத்தில் அவசரமாக, அதேசமயம் சுவையாக செய்யக்கூடிய ஒரு சட்னி வகை தான் இந்த இந்த பொட்டுக்கடலை நிலக்கடலை சேர்த்து செய்யும் சட்னி. இது செய்வதற்கு எளிதானது, செய்யும் நேரமும் மிகவும் குறைவு, சுவையானதும் கூட. பொதுவாக…

blog pengalthalam
| |

கோதுமை தோசை செய்வது எப்படி?

கோதுமை தோசை அவசரத்திற்கு எதுவுமே சாப்பிட இல்லை என்றாலோ அல்லது இனி தான் சமையல் என்ன என்றே பார்த்து செய்து எப்போது சாப்பிட போறோமோ என்ற சலிப்பு வந்துவிட்டாலோ உடனே ‘எடுடா அந்த கோதுமைய…ஊத்துடா தோசைய…’ என்று எடுத்து, கரைத்து, ஊற்றுவதற்கு மிக மிக எளிதான சமையல், இந்த கோதுமை மாவில் ஊற்றி சுடும் தோசை தான். அதை தான் இங்கு பார்க்க போகிறோம். பொதுவாக கோதுமை மாவை மட்டும் சரசரவென்று எடுத்து சலித்து கொட்டி, உப்பு…

blog pengalthalam
|

கொள்ளு சட்டினி செய்வது எப்படி?

“இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது பழமொழி. உடல் மெலிந்தவர்கள் எடை அதிகரிக்க எள்ளு சாப்பிட வேண்டும் என்றும், உடல் பருமன் ஆனவர்கள் எடையை குறைக்க கொள்ளு சாப்பிட வேண்டும் என்றும், இதன் பொருள் ஆகும். இந்த பழமொழியில் இருந்தே ‘கொள்ளு எத்தனை பயன் உள்ளது நம் உடலுக்கு,’ என்பதை அறியலாம். கொள்ளு உடலில் சேரும் கொழுப்பைத் தடுத்து, உடல் பருமனை இந்த கொள்ளு குறைக்கிறது. அதன்படி உடலின் எடை தானாக குறைகிறது. முக்கியமாக பெண்களுக்கு அடிவயிற்றில்…

blog pengalthalam
| |

நிலக்கடலை தேங்காய் சட்னி செய்வது எப்படி?

நிலக்கடலை தேங்காய் சட்னி நாம் இட்லி தோசைக்கு விதவிதமாக சட்னி செய்வோம். அதிலும் தேங்காய் சட்னி என்பது எல்லா நேரத்திலும் இருக்கும், இல்லையா ஒரே செய்யும் தேங்காய் சட்னியை விட, கொஞ்சம் வித்தியாசமாக அதில் நிலக்கடலையும் சேர்த்து ஒரு சட்னியை செய்து பார்ப்போமா சுவை அருமையாக இருக்கும். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்யத் தோன்றும். தேங்காய் சட்னியை வெறுக்கும் குழந்தைகள் கூட, இந்த சுவையை விரும்புவார்கள். இந்த நிலக்கடலை தேங்காய் சட்னியை எப்படி செய்ய வேண்டும்?…

blog pengalthalam
| |

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் எப்போதும் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் உடனே பாயாசமும், கேசரியும் செய்வதற்கு தான் ஓடுவோம், இல்லையா?. வழக்கமாக பாயாசம் செய்யும் பொழுது, ஒன்று பாசிப்பருப்பு பாயாசம் இல்லையென்றால், சேமியா பாயாசம் அப்படித்தானே! சேமியாவில் ஜவ்வரிசி போடுவோம். ஆனால் பாசிப்பருப்பையும் ஜவ்வரிசியையும் சேர்த்து பாயாசம் செய்வது, பொதுவாக நாம் திருமண வீடுகளில் சாப்பிட்டு இருப்போம். இல்லையென்றால் கேள்விப்பட்டிருப்போம். அதனை நம்ம வீட்டிலேயே செய்து பார்த்தால் என்ன? செய்வதற்கு மிகவும் எளிதானது தான். ஒருமுறை முயற்சித்துப்…