blog pengalthalam
| |

வெண்பொங்கல் ஹோட்டல் சுவையில் எளிதாக செய்வது எப்படி?

பொதுவா வெண்பொங்கல் கோவில்ல கொடுப்பார்கள் என்றால், ஆர்வமாக வாங்குவோம். ‘கூச்சமா????… எனக்கா????…சேச்சே…’ என்று தீருவதற்குள் ஓடிப்போய் வாங்குவோம். [ எதற்கு கூச்சம்? பொங்கல் பா! ] அவ்வளவு சுவையாக கோவில் பொங்கல் இருக்கும், இல்லையா? அதே நம் வீட்டில் என்றால் ‘ஐயே!’ தான். என்ன செய்தாலும், ஒரு பார்வையில் அலட்சியப்படுத்திவிடுவார்கள். அதென்ன கோவில் பொங்கல் மட்டும் அவ்வளவு ருசி? என்று கேள்வி கேட்பதோடு விட்டுவிடாமல், அதே போல ருசியாக நம் வீட்டிலும் செய்து பார்த்தால் என்ன? குறைந்தபட்சம்…

blog pengalthalam
|

தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி?

தக்காளி சட்னி என்பது நம் வாழ்வியல் உணவு முறையோடு கலந்த ஒன்று. எப்படி இட்லியையும் நம்மையும் பிரிக்க முடியாதோ…அதேபோல தக்காளி சட்னியையும் நம்மையும் கூட பிரிக்க முடியாது. ஏனெனில் அவசரத்திற்கு இட்லி, தோசைக்கு சட்டென்று நாம் ரெடி பண்ணி வைப்பது தக்காளி சட்னி தான். அதே போல விருந்து என்றால் பலவகை சட்னியுடன் தக்காளி சட்னியும் சேர்த்து இருந்தால் தான் நிறைவே இல்லையா?. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சட்னியும் கூட. ஹோட்டல்களில் கூட ஒவ்வொரு இடத்திலும்…

blog pengalthalam
| |

பூரிக்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலா

‘பூரியாவது ஓரளவுக்கு வந்துடுது, அதுக்கு தொட்டுக்க சரியானதா செய்றதுக்குள்ள ஒவ்வொரு தடவையும் புதுசுபுதுசா பத்து சைடிஷ் கண்டுபிடிச்சிடுறோம் பா…..’ என்று எரிச்சலாக இருக்கிறதா?. ‘பூரி மசாலான்னா மசாலா மாதிரியே குழம்பு கலர்ல வருதுபா…’ என்று ‘பூரியே போடவேண்டாம் போ’ தள்ளி வைத்துவிட்டீர்களா? ‘உணவகத்தில் மட்டும் பூரிக்கு மசாலா எப்படி இப்படி ஒரு சுவையில் இருக்கிறது?’ – என்று யோசனை நம்மில் பலருக்கு உண்டு தானே. கீழே உள்ள படிநிலைகள் படி இந்த செய்முறையைச் செய்து பாருங்களேன்…அதையும் ரசித்து…

blog pengalthalam
| |

உப்பலான சாப்ட் பூரி

மென்மையான பூரிகளும், அதற்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலாவும்… வாய்விட்டு சொல்லிப் பாருங்க. உடனே சாப்பிடணும் போல எண்ணம் எழுகிறதா? ‘எப்படி செய்தாலும் பூரி அப்பளம் போல உடைந்து தான் வருகிறது.’ ‘பூரி ஏன் உப்பவே இல்ல’ இவை சில நேரங்களில் காதில் விழும் சலிப்புகள் தான். இதை விட ‘பூரி வட்டமாவே வரல பா…’ ம் கூட சொல்லுவார்கள். என்ன செய்தால் பூரி மென்மையாக, சுவையாக பிய்த்து சாப்பிட எளிதாக இருக்கும்? – என்று பார்க்கலாமா? பூரிக்கு…

blog pengalthalam
| |

காலிபிளவர் 65

காலிஃப்ளவரின் [ Cauliflower ] தமிழ் பெயர் ‘பூக்கோசு’ அல்லது ‘பூங்கோசு’ அப்படின்னு சொல்லுவாங்க. சில இடங்களில் ‘இலைச்சுருளி’ அப்படின்னும் சொல்லுவாங்க. இது காரசாரமா மசாலாவில் ஊற வைத்து, எண்ணெயில் பொரிச்சு எடுக்கிற உணவாகத் தான் அதிகம் செய்யப்படுகிறது. காலிபிளவர் மத்த காய்கறிகளைப் போலவே ஊட்டச்சத்து நிறைந்தது தான். ஆனாலும் இதை சாப்பிடுறதுனால சிலருக்கு வாயு, அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை அதாவது அல்சர் இதெல்லாம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கு. அதனால தினமுமோ அல்லது அடிக்கடியோ இந்த காலிபிளவரைச்…

pengalthalam blog
|

மெத்தென்ற இட்லி

இட்லி – இது நம்ம தென்னிந்தியாவில் உள்ள மிகவும் ஆரோக்கியமான மற்றும் மிகவும் பிரபலமான காலை உணவு உணவுகளில் ஒன்றாகும். மிகவும் மென்மையாக, சாப்ட்-ஆக இருக்க வேண்டும் என்றே எல்லோரும் நினைப்பர். அது மட்டும் இல்லை இது எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால், உடல் நிலை சரியில்லாத நிலையில் உண்ணக்கொடுக்கப்படும் உணவும் கூட. அதனாலேயே இந்த இட்லி மிக மிக மென்மையாக இருக்க வேண்டியது அவசியமும் கூட. இது அரைத்த அரிசி மற்றும் உளுந்து கலந்து புளித்த…