blog pengalthalam
| |

பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி?

பொட்டுக்கடலை சட்னி  நம் இட்லி தோசைக்கு பொதுவாக காலை நேரம் என்றால் சாம்பார், குருமா என்று செய்வோம். இதுவே மாலை இரவு நேரம் என்றால் அவசரத்திற்கு அப்பொழுது என்ன தோன்றுமோ அந்த சட்னியை செய்து வைத்து விடவும் இல்லையா? அந்த நேரத்தில் அவசரமாக, அதேசமயம் சுவையாக செய்யக்கூடிய ஒரு சட்னி வகை தான் இந்த இந்த பொட்டுக்கடலை நிலக்கடலை சேர்த்து செய்யும் சட்னி. இது செய்வதற்கு எளிதானது, செய்யும் நேரமும் மிகவும் குறைவு, சுவையானதும் கூட. பொதுவாக…

blog pengalthalam
| |

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் எப்போதும் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் உடனே பாயாசமும், கேசரியும் செய்வதற்கு தான் ஓடுவோம், இல்லையா?. வழக்கமாக பாயாசம் செய்யும் பொழுது, ஒன்று பாசிப்பருப்பு பாயாசம் இல்லையென்றால், சேமியா பாயாசம் அப்படித்தானே! சேமியாவில் ஜவ்வரிசி போடுவோம். ஆனால் பாசிப்பருப்பையும் ஜவ்வரிசியையும் சேர்த்து பாயாசம் செய்வது, பொதுவாக நாம் திருமண வீடுகளில் சாப்பிட்டு இருப்போம். இல்லையென்றால் கேள்விப்பட்டிருப்போம். அதனை நம்ம வீட்டிலேயே செய்து பார்த்தால் என்ன? செய்வதற்கு மிகவும் எளிதானது தான். ஒருமுறை முயற்சித்துப்…

blog pengalthalam
| |

பூரிக்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலா

‘பூரியாவது ஓரளவுக்கு வந்துடுது, அதுக்கு தொட்டுக்க சரியானதா செய்றதுக்குள்ள ஒவ்வொரு தடவையும் புதுசுபுதுசா பத்து சைடிஷ் கண்டுபிடிச்சிடுறோம் பா…..’ என்று எரிச்சலாக இருக்கிறதா?. ‘பூரி மசாலான்னா மசாலா மாதிரியே குழம்பு கலர்ல வருதுபா…’ என்று ‘பூரியே போடவேண்டாம் போ’ தள்ளி வைத்துவிட்டீர்களா? ‘உணவகத்தில் மட்டும் பூரிக்கு மசாலா எப்படி இப்படி ஒரு சுவையில் இருக்கிறது?’ – என்று யோசனை நம்மில் பலருக்கு உண்டு தானே. கீழே உள்ள படிநிலைகள் படி இந்த செய்முறையைச் செய்து பாருங்களேன்…அதையும் ரசித்து…

blog pengalthalam
| |

உப்பலான சாப்ட் பூரி

மென்மையான பூரிகளும், அதற்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலாவும்… வாய்விட்டு சொல்லிப் பாருங்க. உடனே சாப்பிடணும் போல எண்ணம் எழுகிறதா? ‘எப்படி செய்தாலும் பூரி அப்பளம் போல உடைந்து தான் வருகிறது.’ ‘பூரி ஏன் உப்பவே இல்ல’ இவை சில நேரங்களில் காதில் விழும் சலிப்புகள் தான். இதை விட ‘பூரி வட்டமாவே வரல பா…’ ம் கூட சொல்லுவார்கள். என்ன செய்தால் பூரி மென்மையாக, சுவையாக பிய்த்து சாப்பிட எளிதாக இருக்கும்? – என்று பார்க்கலாமா? பூரிக்கு…

blog pengalthalam
| |

சாதாரண காது வலி – உருவாக காரணம் மற்றும் தீர்வு 

உடலின் மற்ற பாகங்கள் போல அல்லாமல், காது மிகவும் நுட்பமான மென்மையான பகுதியாகும். மிக முக்கியமான பகுதியும் கூட. இந்தப் பகுதியில் ஏற்படும் வலி சாதாரணமாக இருந்தால் மட்டுமே உடனடி நிவாரணமாக நாமே என்ன செய்யலாம் என்பதை நாமே பார்க்கலாம். காரணம் மற்றும் தீர்வு  சாதாரணமாக கொஞ்சம் அதிகமாக ஜலதோஷம், சளி என்று வந்து அவதிப்படும்போது அதோடு தொடர்புடைய காதும் அதன் அழுத்தத்தினால் வலிக்க தொடங்குகிறது. இதன் காரணமாகத்தான் வலி ஏற்படுகிறது என்று நாம் உணர தொடங்கினால்,…

blog pengalthalam
| |

வறட்டு இருமல் வந்தால் செய்ய வேண்டியவை

நமக்கு வரும் இருமல்களில் சில நேரங்களில் சளி இருமல் ஆக இல்லாமல் வெறும் வறட்டு இருமல் ஆக தொண்டையில் லேசான வலியுடன் வரும். இப்போதெல்லாம் இருமல் மருந்தை நம்பி குழந்தைகளுக்கு கொடுக்க இயலுவதில்லை. இருமல் மருந்தை பெரியவர்கள் அருந்தினாலே புத்தி ஒரு நிலையில் இல்லாமல், மந்தமாக இருப்பதை உணரலாம். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், பாங்கு அடித்தது போல ஒருவித போதை நிலையிலேயே இருப்பதை உணரலாம். தெளிவாக வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். மருத்துவர்கள் பரிந்துரைத்த இருமல்…

blog pengalthalam
|

சுவையான டீ குடிப்போமா?

மொத்தமே ஒரு 10 நிமிடங்களில் சுவை மிகுந்த டீ கிடைத்துவிடும். குறிப்பு : பாலில் டீ சாறு இறங்கிய பிறகு இஞ்சியை போடும் போது, பாலின் சுவையும், தன்மையும் மாறாமல் இருக்கும். திரிந்தும் போகாது.  Tags, டீ, தேயிலை, coffee, காப்பி, pengalthalam, samayal, tasty tea, tea kadai tea, .

blog pengalthalam
|

தக்காளி ரசம்

இந்த தக்காளி ரசம் முன்பு எங்க வீட்டு சின்ன விருந்துக்கு, எங்க பக்கத்து வீட்டு சமையல்காரம்மா செய்ஞ்சாங்க….மறுபடியும் செய்முறை கேட்டு போட்டு இருக்கேன். [ இது விருந்துக்கான தக்காளி ரசம். வீட்ல நமக்கும் முயற்சி செய்யலாம். நல்லாத்தான் இருக்கும். யாரு நம்மள கேட்பா? ] முன்பே ரெடி செய்து வைக்க வேண்டியவை தக்காளி பிசறல்        இப்போது எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசறிவிடுங்க. பிசறி விட்டதை எடுத்து தனியே தனியே வைத்திடுங்க. ரசம் கூட்டி வைத்தல்…

blog pengalthalam
| | |

அக்குள் அழுக்கு பிடிப்பு நீங்க செய்ய வேண்டியவை

  நிறைய பேருக்கு அக்குள் பகுதிகளில் வரும் ரோமங்களில் ஒரு அடுக்கு மாதிரி அதன் மேல் ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மொத்தமாக வடிந்து இருக்கும். குளித்தாலும், சுத்தப்படுத்தும் முயற்சிகள் செய்தாலும் அது போகாமல் அப்படியே அப்பிக்கொண்டு இருப்பதைக் காணலாம். இதனால் அங்கு சேரும் வியர்வை ஒருவித வாடையுடன் வெளிவந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்னை அக்குள் பகுதியில் மட்டும் அல்லாமல் உடலில் வெயில் படாத இடம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கு எல்லாம் அப்பிக்கொண்டு இருக்கும்….

blog pengalthalam
| |

மாதவிடாய் வலி – போக்கும் வழிகள்

             ‘அப்பொழுது அந்த வழியை என்னால் தாங்கவே முடியவில்லை. என்னால் இயல்பாக எளிதான வேலையை கூட செய்ய முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கிறது. நான் அலுவலகத்திற்கு, அல்லது படிப்பதற்கு மற்றும் வெளி வேலைகளுக்கு செல்லும் நிலையில் இல்லை. மேலும் என்னால் தாங்க முடியாத அளவிற்கு வலியும் வேதனையும் நான் அனுபவிக்கிறேன்,’    என்று புலம்புகிறீர்களா? இல்லை உங்களின் அருகில் இந்த புலம்பல் கேட்டு இதற்கு என்ன தான் வழி? என்று…