சைவம்

  • |

    தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி?

    தக்காளி சட்னி என்பது நம் வாழ்வியல் உணவு முறையோடு கலந்த ஒன்று. எப்படி இட்லியையும் நம்மையும் பிரிக்க முடியாதோ…அதேபோல தக்காளி சட்னியையும் நம்மையும் கூட பிரிக்க முடியாது. ஏனெனில் அவசரத்திற்கு இட்லி, தோசைக்கு சட்டென்று நாம் ரெடி பண்ணி வைப்பது தக்காளி சட்னி தான். அதே போல விருந்து என்றால் பலவகை சட்னியுடன் தக்காளி சட்னியும் சேர்த்து இருந்தால் தான் நிறைவே இல்லையா?. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சட்னியும் கூட. ஹோட்டல்களில் கூட ஒவ்வொரு இடத்திலும்…

  • | |

    பூரிக்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலா

    ‘பூரியாவது ஓரளவுக்கு வந்துடுது, அதுக்கு தொட்டுக்க சரியானதா செய்றதுக்குள்ள ஒவ்வொரு தடவையும் புதுசுபுதுசா பத்து சைடிஷ் கண்டுபிடிச்சிடுறோம் பா…..’ என்று எரிச்சலாக இருக்கிறதா?. ‘பூரி மசாலான்னா மசாலா மாதிரியே குழம்பு கலர்ல வருதுபா…’ என்று ‘பூரியே போடவேண்டாம் போ’ தள்ளி வைத்துவிட்டீர்களா? ‘உணவகத்தில் மட்டும் பூரிக்கு மசாலா எப்படி இப்படி ஒரு சுவையில் இருக்கிறது?’ – என்று யோசனை நம்மில் பலருக்கு உண்டு தானே. கீழே உள்ள படிநிலைகள் படி இந்த செய்முறையைச் செய்து பாருங்களேன்…அதையும் ரசித்து…

  • | |

    உப்பலான சாப்ட் பூரி

    மென்மையான பூரிகளும், அதற்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலாவும்… வாய்விட்டு சொல்லிப் பாருங்க. உடனே சாப்பிடணும் போல எண்ணம் எழுகிறதா? ‘எப்படி செய்தாலும் பூரி அப்பளம் போல உடைந்து தான் வருகிறது.’ ‘பூரி ஏன் உப்பவே இல்ல’ இவை சில நேரங்களில் காதில் விழும் சலிப்புகள் தான். இதை விட ‘பூரி வட்டமாவே வரல பா…’ ம் கூட சொல்லுவார்கள். என்ன செய்தால் பூரி மென்மையாக, சுவையாக பிய்த்து சாப்பிட எளிதாக இருக்கும்? – என்று பார்க்கலாமா? பூரிக்கு…

  • |

    தக்காளி ரசம்

    இந்த தக்காளி ரசம் முன்பு எங்க வீட்டு சின்ன விருந்துக்கு, எங்க பக்கத்து வீட்டு சமையல்காரம்மா செய்ஞ்சாங்க….மறுபடியும் செய்முறை கேட்டு போட்டு இருக்கேன். [ இது விருந்துக்கான தக்காளி ரசம். வீட்ல நமக்கும் முயற்சி செய்யலாம். நல்லாத்தான் இருக்கும். யாரு நம்மள கேட்பா? ] முன்பே ரெடி செய்து வைக்க வேண்டியவை தக்காளி பிசறல்        இப்போது எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசறிவிடுங்க. பிசறி விட்டதை எடுத்து தனியே தனியே வைத்திடுங்க. ரசம் கூட்டி வைத்தல்…

  • | |

    காலிபிளவர் 65

    காலிஃப்ளவரின் [ Cauliflower ] தமிழ் பெயர் ‘பூக்கோசு’ அல்லது ‘பூங்கோசு’ அப்படின்னு சொல்லுவாங்க. சில இடங்களில் ‘இலைச்சுருளி’ அப்படின்னும் சொல்லுவாங்க. இது காரசாரமா மசாலாவில் ஊற வைத்து, எண்ணெயில் பொரிச்சு எடுக்கிற உணவாகத் தான் அதிகம் செய்யப்படுகிறது. காலிபிளவர் மத்த காய்கறிகளைப் போலவே ஊட்டச்சத்து நிறைந்தது தான். ஆனாலும் இதை சாப்பிடுறதுனால சிலருக்கு வாயு, அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை அதாவது அல்சர் இதெல்லாம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கு. அதனால தினமுமோ அல்லது அடிக்கடியோ இந்த காலிபிளவரைச்…

  • |

    மெத்தென்ற இட்லி

    இட்லி – இது நம்ம தென்னிந்தியாவில் உள்ள மிகவும் ஆரோக்கியமான மற்றும் மிகவும் பிரபலமான காலை உணவு உணவுகளில் ஒன்றாகும். மிகவும் மென்மையாக, சாப்ட்-ஆக இருக்க வேண்டும் என்றே எல்லோரும் நினைப்பர். அது மட்டும் இல்லை இது எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால், உடல் நிலை சரியில்லாத நிலையில் உண்ணக்கொடுக்கப்படும் உணவும் கூட. அதனாலேயே இந்த இட்லி மிக மிக மென்மையாக இருக்க வேண்டியது அவசியமும் கூட. இது அரைத்த அரிசி மற்றும் உளுந்து கலந்து புளித்த…

  • | |

    சூடான சாதத்திற்கு சுடச்சுட அவசர மோர் குழம்பு

    காரசாரமான பொரியல், அவியல் ன்னு எதோ கொஞ்சம் இருக்கு…ஆனா பிசைஞ்சி சாப்பிட மட்டும் கொஞ்சமாவது ஏதாவது இருக்குதா பாரேன்? – யோசிக்கிறீர்களா??????? கெட்டி தயிர் இருக்கா? அப்போ சட்டுன்னு சூடு ஆறிடறதுக்குள்ள மோர் குழம்பு செய்ஞ்சிடலாமா? ரொம்ப புளிக்காத கட்டி தயரா உங்களுக்கு எவ்வளவு தேவையோ எடுத்துக்கோங்க. அது கூட ஒரு அரை கப் அளவுக்கு தண்ணியும் சேர்த்து கரண்டி வச்சு நல்ல அடிச்சு விட்டுக்கோங்க. கொஞ்சம் கூட கட்டி இல்லாம நல்லா முட்டை அடிக்கிற மாதிரி…